search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம்"

    மொபைல், பைக் வாங்கும்போது திருட்டு பொருட்களா என்பதை கண்டறிய மொபைல் செயலி ஒன்று போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்று அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. #DigiCop #VijaySethupathi
    சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் டிஜிகாப் என்ற மொபைல் செயலியை போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    மொபைல் செயலியை தொடங்கி வைத்த பின் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:-

    ‘சிசிடிவி குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் ஆதரவோடு சி.சி.டி.வி. கேமரா அமைக்கும் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் விஜய் சேதுபதி, சாலமன் பாப்பையா, கோபிநாத், டாக்டர் சாந்தா, ஐசரி கணேஷ், கமலா செல்வராஜ், ஜோஸ்னா செல்லப்பா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த விழிப்புணர்வு திட்டத்தில் இணைந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.



    இந்த டிஜிகாப் செயலி மூலம் செல்போன், பைக் திருட்டை தவிர்க்க முடியும். பழைய மொபைல், பைக் வாங்கும்போது அது திருட்டுப் பொருளா என்பதை கண்டுபிடிக்க இந்த செயலி உதவும்’. இவ்வாறு அவர் பேசினார்.

    விஜய் சேதுபதி பேசும் போது, ‘மக்களின் முக்கிய பிரச்சனையை காவல்துறையினர் கையில் எடுத்திருப்பது சிறப்பானது. காவல் நிலையங்களில் குப்பையாக இருந்த வாகனங்கள் அகற்றப்பட்டது பாராட்டத்தக்கது’ என்று குறிப்பிட்டார். #DigiCop #VijaySethupathi

    வேப்பேரியில் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் நள்ளிரவில் தீக்குளிக்க முயன்ற 2 பேரை போலீசார் தடுத்து நிறுத்தினர். #chennaiCommissionerOffice

    சென்னை:

    சென்னை மாங்காட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மாமியார் சாந்தி. இவர்களுக்கும், பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    நேற்று மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கிருஷ்ண மூர்த்தி-சாந்தி மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இந்த நிலையில் இருவரும் நேற்று நள்ளிரவு வேப்பேரியில் உள்ள போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு வந்தனர். திடீரென்று 2 பேரும் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார் ஓடி சென்று இருவரையும் தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது.

    பின்னர் 2 பேரையும் வேப்பேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தாங்கள் அளித்த புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீக்குளிக்க முயன்றோம் என்று தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அடிக்கடி தீக்குளிக்க முயற்சிக்கும் சம்பவம் நடந்து வருகிறது. பகல் நேரங்களில் தீக்குளிக்க முயலும் நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வருகிறார்கள்.

    பகல் நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் அதிகம் ஈடுபடுகிறார்கள். இதனால் இதுபோன்ற சம்பவங்களை உடனே தடுக்கிறார்கள்.

    நேற்று நள்ளிரவில் தீக்குளிப்பு முயற்சி சம்பவம் நடந்துள்ளதால் இரவு நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் மெத்தனமாக இருக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கமி‌ஷனர் உத்தரவிட்டுள்ளார்.

    ×